Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவரது மனைவி துளசி. இவர்களது 2-வது குழந்தை பிரதீப்(வயது 2). இந்த குழந்தையை துளசி இரக்கமின்றி கொடூரமாக தாக்கினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, துளசியை கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர். விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் மச்சவாடி பாலன் நகரை சேர்ந்த கண்ணையா மகன் மணிகண்டன் என்ற பிரேம்குமார் (31) என்பவருடன் துளசிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதும், குழந்தையை கொடூரமாக தாக்கி, அந்த வீடியோவை மணிகண்டனுக்கு துளசி அனுப்பி, இருவரும் ரசித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மணிகண்டனை பிடிக்க தனிப்படை போலீசார் புதுக்கோட்டைக்கு விரைந்தனர். ஆனால் அவர் அறந்தாங்கியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர்.